Tuesday, October 28, 2008

Ninaithu Ninaithu Paarthen - 7G Rainbow Colony

நினைத்து நினைத்து பார்த்தேன் நெருங்கி விலகி நடந்தேன்
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
ஓ ஓ ஓ உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்
எடுத்து படித்து முடிக்கும் முன்னே
எறியும் கடிதம் எதற்கு பெண்ணே ?
உன்னால் தானே நானே வாழ்கிறேன்
ஓ ஓ ஓ உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும்
உன்னை கேட்கும் எப்படி சொல்வேன்
உதிர்ந்து போன மலரின் மௌனமா ?
தூது பேசும் கொலுசின் ஒலியை
அறைகள் கேட்கும் எப்படி சொல்வேன் ?
உடைந்து போன வளையல் பேசுமா ?
உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் இன்று எங்கே ?
தோளில் சாய்ந்து கதைகள் பேச முகமும் இல்லை இங்கே
முதல் கனவு முடிந்திடும் முன்னமே தூக்கம் கலைந்ததே
(நினைத்து நினைத்து...)

பேசி போன வார்த்தைகள் எல்லாம்
காலம் தோரும் காதினில் கேட்கும்
சாம்பல் கரையும் வார்த்தை கரையுமா ?
பார்த்து போன பார்வைகள் எல்லாம்
பகலும் இரவும் கேள்விகள் கேட்கும்
உயிரும் போகும் உருவம் போகுமா ?
தொடர்ந்து வந்த நிழலும் இங்கே
தீயில் சேர்ந்து போகும்
திருட்டு போன தடயம் பார்த்தும்
நம்பவில்லை நானும்
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய்
என்றே வாழ்கிறேன்...

Piraiye Piraiye - Pithamagan

பிறையே பிறையே வளரும் பிறையே இது நல்வரவே
மலரே மலரே மலர்ந்தாய் மலரே உனக்கேன் தளர்வே
பயணம் எவர்க்கும் இங்கு முடியும் இங்கு பிறந்தாயோ
உதயம் உனக்கு இங்கு தொடக்கம் விழிகள் திறந்தாயோ
(பிறையே பிறையே...)

தன்னந் தனியனாக மண்ணில் வர ஏங்கினாயோ
என்ன துணிச்சலோடு இந்த வரம் வாங்கினாயோ
சோலையில் நின்ற போதிலும் அது மாலையே என்ற போதிலும்
பூவெல்லாம் என்றும் பூக்களே
இங்கு மாறுமா அதன் பெயர்களே
குடிசை என்ன செய்யும் , கோட்டை என்ன செய்யும்
உன்னை மாற்றுமா ..........
(பிறையே பிறையே ...)

ஊர்வலங்கள் எல்லாம் வரும் உன்னை நோக்கி தானே
ஊரும் உறவும் ஏது எல்லாம் உனகொன்றுதானே
பணத்திலே தினம் புரண்டவர்
பதவியில் தலை கனதவர்
புகழிலே எல்லை போனவர்
நிலை உயர்ந்தவர் அதில் தாழ்ந்தவர்
இந்த பேதம் எல்லாம் வெந்து போக கண்டு
தெளிந்த மனிதன் நீ ........
(பிறையே பிறையே ...)

http://www.youtube.com/watch?v=4sgdHqRpzeI

Kaatrodu Kuzhalin Naathame - Kodai Mazhai

காற்றோடு குழலின் நாதமே .. காற்றோடு குழலின் நாதமே ..

கண்ணன் வரும் நேரம் யமுனையின் கரை ஓரம் அவன் வரும் வழி பார்த்து வழி பார்த்து தவிக்கும் மனத்தில் இனிக்க வருவது ... (காற்றோடு...)

வண்டாடும் அரவிந்த மலர் உந்தன் கண்கள்
வந்தாடும் எனதுள்ளம் பிருந்தாவனம்
விண்மீன்கள் வானில் விளகேற்றும் நேரம்
கண்ணா உன் மார்பில் விழி மூட வேண்டும்
அந்த சிலைக்கு அந்தி கலைக்கு
விளக்கம் அளிக்க அழைத்த பொழுதினில் காற்றோடு ..

பாதங்கள் சதியில் ஆடும் தக திமி தகவென்று பாவங்கள் விழியில் ஆடும் தக தக தகவென்றுநயனமாடும் ஒரு நவரச நாடகம் நளினமாக இனி அரங்கேறும் ச ரி க நி ச ரி நி ச ரி க ரி ச ரி நி ச நி க ப தா நி ச ச ச ரி ரி ரி க க க நி நி நி க க க ப நி நி நி க க க நி நி நி க ச ச ப தா நி
கார்கொண்ட மழை மேகம் வேர் கொண்டு போகும்
கையோடு உனை வந்து வர வேர்கவே
கணம் கூட இன்று யுகமானதென்ன
மருந்தான நீயே நோயானதென்ன
இந்த தவிப்பும் இந்த துடிப்பும் எனக்கு எதற்கு தணிக்க இனி வரும்
காற்றோடு ....